உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உயர் அழுத்த கம்பியில் சிக்கிக் கொண்ட விளம்பர பலகையை மின் ஊழியர் ஒருவர் உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் அகற்றி பெரும் விபத்தை தடுத்த வீடியோ வெளியாகி உள்ளது. நொய்டாவில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் செக்டர்-20 அருகே விளம்பர பலகை ஒன்று உயர் மின்னழுத்த கம்பியில் சிக்கிக்கொண்டு ஆபத்தான சூழலை உருவாக்கியது. இதனை மின்சார ஊழியர் ஒருவர் துணிச்சலுடன் அகற்றியதை அப்பகுதியினர் இணையத்தில் பதிவிட நெட்டிசன்கள் அவரை சூப்பர்மேன் என பாராட்டி வருகின்றனர்.