டெல்லி ஆர்ஆர்டிஎஸ் பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். டெல்லி காஜியாபாத்தில் உள்ள சாஹிபாபாத் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள நியூ அசோக் நகர் இடையே 4 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கிலோமீட்டர் ஆர்ஆர்டிஎஸ் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து அவர் அதில் பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி மற்றும் மீரட் இடையேயான பயணத்தை எளிதாக்கும் இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன் பெறுவர் என்ற என்சிஆர்டிசி அதிகாரிகள் ஏற்கனவே டெல்லி- மீரட் ஆர்ஆர்டிஎஸ் வழித்தடத்தின் 42 கிலோ மீட்டர் செயல்பாட்டில் உள்ள நிலையில், புதிய பாதையை திறப்பதன் மூலம் 55 கிலோ மீட்டர் நீளமாக அதிகரிக்கும் என்றனர். 82 கிலோ மீட்டர் முழு பாதையும் முடிவடைந்த பின், டெல்லியிலிருந்து மீரட்டுக்கு ஒரு மணி நேரத்தில் பயணிக்க முடியும்.