வரிவிதிப்பு தொடர்பாக இந்தியாவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது என கூறியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், விரைவில் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என தெரிவித்துள்ளார். மேலும் ஆப்பிரிக்காவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், வரிவிதிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 90 நாட்களில் ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.