போப் பிரான்சிஸின் இறுதி சடங்கில் இந்தியா சார்பில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை வாடிகன் புறப்பட்டு சென்றார். சனிக்கிழமை காலை 10 மணிக்கு போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு நடைபெறும் என்று வாடிகன் அறிவித்துள்ளது.