அமெரிக்காவின் கென்டக்கி மற்றும் மிசோரி பகுதிகளில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளிட்டவை இந்த சூறாவளி காரணமாக சேதமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி 38க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சூறாவளி காரணமாக மின்வெட்டில் வீடுகள் இருளில் மூழ்கியதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடந்துவரும் நிலையில் பாதிப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.