நேபாளத்தில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 53 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தின் திபெத் எல்லைஅருகே காலை 6:35 மணிக்கு இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.1 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கிய நிலையில் பதற்றமடைந்த மக்கள் தங்கள் உயிரை பிடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். இதன் எதிரொலியால் வட இந்தியாவிலும் நில அதிர்வு உணரப்பட்டது. பீகார், அசாம், மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் வட இந்திய மக்கள் அச்சமடைந்தனர்.