போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களில் 10 லட்சம் பேரை காசாவில் இருந்து லிபியாவில் நிரந்தரமாக குடியேற்ற அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. இஸ்ரேல் - காசா இடையே நடைபெற்று வரும் போரால் ஏராளமான பாலஸ்தீனியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை லிபியாவில் குடியேற்றுவதற்கான திட்டம் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அந்நாட்டு தலைமையுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.