நைஜீரியாவில் பள்ளி கண்காட்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. நைஜீரியாவின் தென்மேற்கு நகரமான இபாடானில் உள்ள பள்ளி ஒன்றில், கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆண்டு நிறைவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க மாணவ, மாணவியரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். இதில், எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது .