அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராஜ்கோட் மேற்கு தொகுதியில் ஒருநாள் கடைகள் அடைக்கப்பட்டன. குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி பிரதமரானதால், விஜய் ரூபானி முதலமைச்சரானார். 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை குஜராத் மாநில முதலமைச்சராகப் பதவி வகித்த அவர், 2021 செப்டம்பரில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.