மும்பை கடற்கரையில் இந்திய கடற்படையின் படகு மோதியதில் பயணிகள் படகு கடலில் கவிழ்ந்து 13 பேர் உயிரிழந்தனர். சுற்றுலாத் தலமான எலிபெண்டா குகைகளை நோக்கி சென்ற பயணிகள் படகு மீது இந்திய கடற்படை படகு மோதியது. இதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், 75 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.