பாகிஸ்தான் இராணுவ தளங்கள் மீதான இந்தியாவின் துல்லியமான தாக்குதல்களை அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் உறுதிப்படுத்தி உள்ளார். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 10 ஆம் தேதி, இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரியல் பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படை தளம் மற்றும் பிற முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் 4 நாட்கள் பின் முடிவுக்கு வந்தன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நினைவுச்சின்னத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், இந்தியாவின் துல்லியமான தாக்குதல்களை உறுதிப்படுத்தியதோடு, தாக்குதல் குறித்து ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், தன்னை அதிகாலை 2.30 மணிக்கு எழுப்பி தெரிவித்தாக கூறியுள்ளார்.