சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் குறித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் எனக் கூறியுள்ள முதலமைச்சர், நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும், அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்! என தெரிவித்துள்ளார்.செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா, எதற்கெடுத்தாலும் அம்பேத்கரின் பெயரை கூறுவது எதிர்க்கட்சிகளுக்கு பேஷனாகி விட்டதாகவும், அதற்கு பதில் கடவுள் பெயரை உச்சரித்தாலாவது சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் எனவும் பேசியது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.