அமெரிக்காவில் காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ பரவல் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ள நிலையில், இரவு நேரங்களில் அவர்களது வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறுவதால் போலீசார் ஊரடங்கு பிறப்பித்துள்ளனர்.