அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவால் நயாகரா அருவி பகுதியளவு உறைந்து வெண் போர்வை போர்த்தியது போல ரம்மியமாக காட்சியளித்தது. அமெரிக்காவையும், கனடாவையும் இணைக்கும் பிரம்மாண்ட அருவியான நயாகரா கடும் குளிரால் பகுதியளவு உறைந்துள்ளது. இதனால் அருவின் பெரும்பாலான பகுதிகள் வெண்ணிறத்தில் காட்சியளிக்கும் நிலையில், அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இதனிடையே உறைந்துள்ள பனிகட்டிகளுக்கு கீழ் வழக்கம் போல நீர் பாய்ந்தோடுகிறது.