பிரதமர் மோடி வந்து சென்ற ஈரம் கூட காயவில்லை, அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான கோரிக்கையை நிராகரித்து, தமிழக விவசாயிகளுக்கு மத்திய பாஜக அரசு துரோகம் இழைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடினார். மெட்ரோ திட்டத்தை நிராகரித்துவிட்டு எந்தவித உறுத்தலும் இன்றி தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமரின் காதுகளுக்கு தமிழ்நாட்டின் குரல் ஏன் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை? என வினாக்களை அடுக்கினார். நெல்லின் ஈரப்பத அளவிற்கான தளர்வை கடந்த ஆண்டுகளில் பலமுறை வழங்கிய மத்திய அரசு, தற்போது வழங்க மறுப்பது ஏன்? என்றும், கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணமும் வழங்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எவ்விதத்தில் நன்மை செய்யும் என நினைக்கீறீர்கள்? என்றும், முதலமைச்சர் ஸ்டாலின், கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளார். இதையும் பாருங்கள் - "மத்திய அரசின் அடுத்த துரோகம்" முதல்வர் கொடுத்த அதிர்ச்சி சேதி |TamilNaduIssue | CentralGovernment