டெல்லியில் கடற்படை தளபதி தினேஷ் குமார் திரிபாதி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பகல்ஹாம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.