மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செண்டரில் உடைமாற்றும் அறையில் செல்போன் கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்கேன் எடுப்பதற்காக உடைமாற்றும் அறைக்கு சென்ற பெண், செல்போன் கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசை அழைத்தார். விசாரனை மேற்கொண்ட போலீசார் ஸ்கேன் செண்டர் ஊழியரை கைது செய்தனர்.