நியூயார்க் புரூக்ளின் பாலத்தில் மெக்சிகோ கடற்படையின் படகு மோதியதில் 2 பேர் பலியான நிலையில் 19 பேர் காயமடைந்தனர். மெக்சிகோ கடற்படை பள்ளியில் பயிற்சி வகுப்புகளை முடித்த 277 பேரை 15 நாடுகளில் உள்ள 22 துறைமுகங்களை பார்வையிடுவதற்காக படகில் அழைத்து சென்றுள்ளனர். மெக்சிகோ துறைமுகமான அகபுல்கோவிலிருந்து புறப்பட்ட இந்த படகு 297 அடி நீளமும், 40 அடி அகலமும் கொண்டுள்ளது. இந்நிலையில், நியூயார்க் புரூக்ளின் பாலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, படகின் கம்பங்கள் பாலத்தின் மேல்பகுதியில் மோதி பலத்த சேதமடைந்தது.