மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேலமங்கநல்லூர் மகாமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள், பிள்ளையார் கோவில் குளக்கரையில் இருந்து கரகம் எடுத்து காவடிகளுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.