தன் வாழ்வில் நடந்தக் கதை என்று மெய்யழகன் படம் குறித்து சஸ்பென்ஸ் வைத்துப் பேசிய நடிகர் அரவிந்த் சுவாமி, படம் வெளியான பிறகு அதைப்பற்றி விரிவாக பேசுகிறேன் என கூறினார். இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்திக், அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வருகிற 27ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.