பத்ம விருதுகளை பெற்றவர்களுடனான சந்திப்புப்புக்கு பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரதமர் நரேந்திரமோடி எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். பத்ம விருதுகளை பெற்ற அனைவரும் நம் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். சாதனையாளர்களின் அனுபவங்கள், வாழ்க்கை முறை, கடந்து வந்த பாதை அனைத்தும் நமக்கு ஊக்கமளிப்பவை எனவும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.