சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ பேபி சந்தித்தார். சந்திப்பிற்கு பிறகு எம்.ஏ பேபி செய்தியாளர்களை சந்தித்த வீடியோவை, முதலமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்றதற்கும், மாநில சுய ஆட்சிக்கான உயர்மட்டக் குழு அமைத்ததற்கும் எம்.ஏ பேபி வாழ்த்துகளை தெரிவித்ததாக பகிர்ந்துள்ளார்.