மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா மற்றும் அமெரிக்காவின் கோகோ காப் பலப்பரீட்சை நடத்தினர். இதில் சபலென்கா 6க்கு 3, 7க்கு 6 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.