பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் 50 வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் விதமாக ஜூலை 19 ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் ஆனந்த யாழை என்ற இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழ் திரையுலகம் சார்பில் நடத்தப்படும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமல், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ரவி மோகன், சிவகார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.