இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள கத்தார் மன்னர் குடியரசு தலைவர் திரௌபதி முர்வு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு அதிகாரிகள் உடன் இருந்த நிலையில், பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.