அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியானவர் என நினைப்பதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இருப்பினும் அடுத்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவை கமலா ஹாரிஸ் தான் எடுக்க வேண்டும் என்றும் பைடன் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டு ஹாரிஸை நாட்டின் முதல் பெண் துணை அதிபராக நியமித்ததன் மூலம் பைடன் புதிய வரலாற்றை உருவாக்கினார். இருப்பினும் கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனுக்கு பதிலாக போட்டியிட்ட கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்பிடம் தோல்வியடைந்தார்.