ஜெயம் ரவி நடிக்கும் 34வது படத்தின் படப்பிடிப்பு வரும் 16ம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 'டாடா' பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில், தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.