காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது வருத்தத்திற்குரியது என போப் பிரான்ஸிஸ் கவலை தெரிவித்துள்ளார். ஈஸ்டர் பண்டிகையையொட்டி வாடிகன் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி, பேராலயத்தில் இருந்தவாறு போப் பிரான்சிஸ் கையசைத்து ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து உலக அமைதியை வலியுறுத்தி உரையாற்றிய அவர், காசாவில் பசியால் வாடும் மக்களுக்கு உதவ நாம் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். காசாவில் துன்பப்படும் மக்களுடன் தான், தமது எண்ணங்கள் இருப்பதாக வேதனையை பகிர்ந்த அவர், ராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் உடனே நிறுத்திவிட்டு அமைதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தினார்.