காசா மீது தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொல்வதை நிறுத்தவில்லை என்றால், இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறி இஸ்ரேல் காசாவை தாக்குவதுடன், அங்குள்ள அப்பாவி மக்களுக்கான மனிதாபிமான உதவிகளையும் தடுப்பதாக மூன்று நாடுகளும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.