ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஹவுதிக்களின் கட்டுப்பாட்டில் உள்ள செயற்கைக்கோள் தொலைக்காட்சியான அல்-மஸீரா, தலைநகர் சனாவிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேல் குண்டுவீசியதாகத் தெரிவித்தது.