ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததால் அங்கு ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு ஆபரேசன் குழு என அழைக்கப்படும் பிரத்யேக பயிற்சி பெற்ற வீரர்களும் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். லசானா என்ற இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.