இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஷில்லாங்ஙில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியின் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து 2-வது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சிகள் செய்தனர். அதன் பலனாக ஆட்டம் முடியும் தருவாயில் ஜாம்ஷெட்பூர் அணி மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது. இதனால் 2க்கு 0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.