இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3க்கு 0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. அகமதாபாத்தில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 356 ரன் குவித்தது. 357 ரன் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி, 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 214 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 142 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது