இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சண்டையை நிறுத்துவதற்கு மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏழாவது முறையாக கூறியுள்ளார். தமது கத்தார் பயணத்தின் போது, தோஹாவில் உள்ள விமானப்படை தளத்தில் அமெரிக்க துருப்புகளை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தால் மகிழ்ச்சியடைவதாகவும், அது தொடரும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும் அது ஒரு பெரிய வெற்றி என்றும் தெரிவித்தார்.