பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீனா கூறியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதால், பாகிஸ்தான் அமைச்சர் முகமது இஷக் தர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உடன் ஆலோசனை நடத்தினார்.