எட்டாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் வரும் எதிரியின் ஏவுகணைகளை கண்டுபிடிக்கும் ரஷ்யாவின் Voronezh ரேடார் சிஸ்டத்தை வாங்கும் ஒப்பந்தத்தில், இந்தியா விரைவில் கையெழுத்திடும் என தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் இருந்து மட்டுமல்ல தெற்கு மற்றும் மத்திய ஆசியா, இந்திய பெருங்கடல் நாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களையும் இந்த ரேடாரால் முன்னதாகவே கண்டுபிடிக்க முடியும் என கூறப்படுகிறது.