சிக்கிம் மாநிலத்தில் பெய்து வரும் இடைவிடாத மழையால் முக்கிய சாலை தடைப்பட்டதால் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கின்றன. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடைபட்டது. மங்கன் மாவட்டத்தில் 11 பேருடன் சென்ற சுற்றுலா வாகனம் டீஸ்ட்லா ஆற்றில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயமுற்றனர். 8 சுற்றுலாப் பயணிகள் மாயமானார்கள். கனமழையால் அவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்த 2 நாட்களுக்கு வடக்கு சிக்கிம் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.