உத்தரபிரதேசம் மாநிலத்தில் திருமணமான ஒரே வாரத்தில் மூன்றாவது மனைவியை கணவன் அடித்தே கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. வாரணாசி மாவட்டத்தில் உள்ள Amauli கிராமத்தில் 44 வயதான ராஜு என்ற நபர், இரு திருமண முறிவுக்கு பின் மே 9ஆம் தேதி மூன்றாவதாக ஆர்த்தி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில், திருமணமாகி கடந்த சில நாட்களிலேயே தம்பதிக்கு இடையே மோதல் ஏற்படவே, வாக்குவாதத்தில் கணவன் ராஜு மனைவியை பலமாக தாக்கி கொன்றதாக சொல்லப்படுகிறது.