இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோர் தங்களின் குற்றச்செயல்களுக்கு கூகுள் சேவைத் தளங்களையே பயன்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2024-ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில், வாட்ஸ்-அப் மூலம் இணைய மோசடிகள் தொடர்பாக, 43 ஆயிரத்து 797 புகார்களும், டெலிகிராமுக்கு எதிராக 22 ஆயிரத்து 680 புகார்களும், இன்ஸ்டாகிராமுக்கு எதிராக 19 ஆயிரத்து 800 புகார்களும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.