அர்ஜென்டினாவில் எக்ஸால்டேசியன் டி லா குரூஸில் (( Exaltacion de la Cruz )) பெய்த கனமழையால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், சாலைகளிலும் இடுப்பளவு தண்ணீர் பாய்ந்தோடியது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று வருகின்றனர். இதனிடையே நிலைமை மேலும் மோசமடைவதற்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.