மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் மழைநீர் புகுந்ததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். மும்பையின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனிடையே, மும்பையின் ஆச்சார்யா ஆத்ரே சௌக் மெட்ரோ நிலையத்திற்குள் மழை நீர் புகுந்ததால் பயணிகள் வெளியே வர முடியாமல் உள்ளே சிறிது நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.