தமிழகத்தில் கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிருஷண்கிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் திடீரென இரவு நேரத்தில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.