TNPSC குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான 3 ஆயிரத்து 935 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான குருப்-4 தேர்வு அறிவிப்பு, கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்காக ஆன்லைன் மூலம் சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த பணிகளுக்கான எழுத்துத்தேர்வு ஜூலை 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும் குரூப் 4 தேர்வு முடிவுகளுக்கு முன்பு பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் உருவானதால், அதன் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.