சர்வதேச பவர் லிப்டிங் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற கரூர் இளைஞருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாய்லாந்தின் பட்டாயா நகரில் மே 10 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற்ற சர்வதேச பவர் லிப்டிங் போட்டியில், தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்று திரும்பிய கரூரை சேர்ந்த ஜீவாந்தத்துக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.