கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாக நீடித்த இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவை எட்டினாலும், பாலஸ்தீன மக்களின் அழுகுரல் இன்னும் நின்றபாடில்லை. இஸ்ரேல் ராணுவம் நடத்திய கண்மூடித்தனமாக தாக்குதல் காரணமாக காசாவில் குடியிருப்புகள் அனைத்தும் பாழாய்போகின. வீடுகள், கட்டடங்கள் போன்றவை இருந்த அடையாளமே தெரியாத அளவுக்கு சின்னாபின்னமானதால், அதை கண்டு மக்கள் வேதனை அடைந்தனர்.