குஜராத் மாநிலம் பரூச்சில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். தாஹேஜில் உள்ள GFL தொழிற்சாலையில் வால்வு ஒன்றில் பழுது ஏற்பட்டு விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை சுவாசித்த 4 தொழிலாளர்கள் மயக்கமடைந்த நிலையில், அவர்களை சக தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.