இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவித்திடவும், அவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையினை தள்ளுபடி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.புதுக்கோட்டை மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற முதலமைச்சர், கடந்த மாதம் 21 ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருப்பது, மீன்வ குடும்பங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.