பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாக NSE எனப்படும் தேசிய பங்குசந்தை நிறுவனம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ள NSE தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ் சவுஹான்,அவர்களின் இந்த இக்கட்டான நேரத்தில் தாங்களும் கூட நிற்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டது பெரும் துயரை தந்துள்ளதாகவும் ஆஷிஷ் சவுஹான் வருத்தம் தெரிவித்துள்ளார்.