தென்னாப்பிரிக்காவின் ((Botswana))போட்ஸ்வானாவிலிருந்து இரண்டு கட்டங்களாக இந்தியாவிற்கு 8 சிறுத்தைகள் கொண்டு வரப்பட உள்ளன. நம் நாட்டில் அழிந்துபோன சிறுத்தை இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக, கடந்த 2022 ம் ஆண்டு ஆப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து 8 சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, தற்போது போட்ஸ்வானாவிலிருந்து மீண்டும் 8 சிறுத்தைகள் கொண்டு வரப்பட உள்ளன. இத்திட்டத்திற்காக இதுவரை 112 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், அதில் 67 சதவீதம் மத்தியப் பிரதேசத்தில் சிறுத்தை மறுவாழ்வுக்குச் சென்றுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்டமாக 4 சிறுத்தைகள் மே மாதம் கொண்டு வரப்படும் நிலையில், அவை காந்தி சாகர் சரணாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.