மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் கேப்டன் சுப்மன் கில் இடையே ஈகோ மோதல் இருப்பதாக சமூக வலைதலங்களில் ரசிகர்கள் கொளுத்தி போட்டு வருகின்றனர்.சனிக்கிழமை நடந்த போட்டியின் போது, சுப்மன் கில் கைக்கொடுக்க மறுத்தது, பதிலுக்கு கில் அவுட்டான போது அவரின் முகம் அருகே சென்று பாண்டியா ஆக்ரோஷமாக கத்தியது போன்று வீடியோக்களை வைரலாக்கி வருகின்றனர்.